கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை பணிகள் மந்தம்.!!

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை பணிகள் மந்தமாக நடைப்பெற்று வருவதாக, ஊராட்சி ஒன்றிய குழு அவசர கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பகுதியில் அடிப்படை பணிகள் மந்தமாக நடைப்பெற்று வருவதாக, ஊராட்சி ஒன்றிய குழு அவசர கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அவசர கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நாகராணி கனகராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கணேசன், ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.எம்.ஆர்.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் வரவேற்று பேசினார்.

முன்னதாக வரவு செலவு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் பேசிய ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வார்டு பகுதிகளுக்கு மின் விளக்குகள் ஒதுக்கப்பட்டு இதுவரை பொருத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் அடிக்கடி எங்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். உடனடியாக மின்விளக்குகளைக் கிராமப் பகுதிகளில் பொருத்த நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.



கடந்த கூட்டத்தின் போது வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது, அதனை விரைந்து முடிக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்குக் கேட்கும் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தருவது அவசியம் என்றனர்.

பின்னர் பேசிய ஒன்றியக்குழு தலைவர் நாகராணி கனகராஜ் பேசியதாவது:- ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளுக்குத் தேவையான பணிகளை விரைந்து முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொதுநிதியில் எவ்வளவு இருப்பு உள்ளது, பணிகள் எவ்வளவு நடைபெறுகிறது என்ற விபரங்களை ஆணையாளர் தெளிவுபடுத்த வேண்டும் பேசினார்.

பின்னர் பேசிய ஆணையாளர் கணேசன், பணிகள் அனைத்தும் விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நிதி விபரங்கள் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...