உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினம்- கிணத்துக்கடவு அருகே சேரிபாளையம் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினம்- கிணத்துக்கடவு அருகே சேரிபாளையம் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத் துறையினர் சார்பில் உலக அயோடின் குறைபாடுகள் தடுப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா உத்தரவு பேரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சேரிபாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி தலைமை தாங்கினார்.
மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் திலீப்குமார், வட்டார விரிவாக்கக் கல்வியாளர் ஜோதிமணி ஆகியோர் கலந்துகொண்டு அயோடின் குறைபாடுகள் தடுப்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினர்.
அயோடின் சத்து குறைபாடு ஏற்பட்டால் தைராய்டு சுரப்பி பிரச்சனை, முன் அறிவுத்திறன் குறைபாடு, காதுகேளாமை பிரச்சனை, நரம்பு பிரச்சனை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு, குழந்தை இறப்பு, குழந்தையின் நுண்ணறிவு குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றும், அயோடின் கலந்த உப்பை நாள்தோறும் அனைவரும் ஒரு கரண்டி உபயோகிக்க வேண்டுமென்றும், கடையில் விற்பனை செய்யும் உப்பில் உதிக்கும் சூரியன் போன்ற முத்திரை பதித்த உப்பை உபயோகிக்க வேண்டும் என்றும் விழிப்பு நிகழ்ச்சியின் போது சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி சிறார் நலத்திட்டக் குழு உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜகோபால், பள்ளி ஆசிரியர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத் துறையினர் சார்பில் உலக அயோடின் குறைபாடுகள் தடுப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.
கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா உத்தரவு பேரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சேரிபாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி தலைமை தாங்கினார்.
மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் திலீப்குமார், வட்டார விரிவாக்கக் கல்வியாளர் ஜோதிமணி ஆகியோர் கலந்துகொண்டு அயோடின் குறைபாடுகள் தடுப்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினர்.
அயோடின் சத்து குறைபாடு ஏற்பட்டால் தைராய்டு சுரப்பி பிரச்சனை, முன் அறிவுத்திறன் குறைபாடு, காதுகேளாமை பிரச்சனை, நரம்பு பிரச்சனை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு, குழந்தை இறப்பு, குழந்தையின் நுண்ணறிவு குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றும், அயோடின் கலந்த உப்பை நாள்தோறும் அனைவரும் ஒரு கரண்டி உபயோகிக்க வேண்டுமென்றும், கடையில் விற்பனை செய்யும் உப்பில் உதிக்கும் சூரியன் போன்ற முத்திரை பதித்த உப்பை உபயோகிக்க வேண்டும் என்றும் விழிப்பு நிகழ்ச்சியின் போது சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி சிறார் நலத்திட்டக் குழு உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜகோபால், பள்ளி ஆசிரியர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.