மாணவனின் தந்தை கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் பேருந்தில் இருந்து இறங்கும்போது வேகமாக பேருந்தை இயக்கியதால் பள்ளி மாணவன் தவறி விழுந்த சம்பவம் தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கார்த்திகேஷ்வரன் (15). கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 7ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பும்போது கோவை காந்திபுரத்திலிருந்து-வாளையார் நோக்கிச் செல்லும் 96ம் எண் அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்து நடத்துனரிடம் பி.கே புதூர் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது நடத்துநர், ‘‘பள்ளி மாணவர்களால் இதே தொந்தரவாக போய்விட்டது. காசு இல்லை என்றால் எதிலே வேண்டுமானாலும் ஏறுவது, எங்கே வேண்டுமானாலும் இறங்குவது’’ என கூறி கார்த்திகேஷ்வரனை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பி.கே புதூர் நிறுத்தம் அருகே வந்தபோது, பஸ் சென்று கொண்டிருக்கும்போதே இறங்கு இறங்கு என அவரை இறங்க சொல்லியுள்ளார்.
அப்போது, இறங்க முற்பட்ட மாணவன் பேருந்தில் இருந்து தவறி விழுந்துவிட்டார். இதில் அவரது வலது காலில் தொடைப்பகுதி, முழங்காலுக்கு மேல் வீக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து, மாணவனின் தந்தை நாகராஜ் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை (மேற்கு) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கார்த்திகேஷ்வரன் (15). கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 7ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பும்போது கோவை காந்திபுரத்திலிருந்து-வாளையார் நோக்கிச் செல்லும் 96ம் எண் அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்து நடத்துனரிடம் பி.கே புதூர் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது நடத்துநர், ‘‘பள்ளி மாணவர்களால் இதே தொந்தரவாக போய்விட்டது. காசு இல்லை என்றால் எதிலே வேண்டுமானாலும் ஏறுவது, எங்கே வேண்டுமானாலும் இறங்குவது’’ என கூறி கார்த்திகேஷ்வரனை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பி.கே புதூர் நிறுத்தம் அருகே வந்தபோது, பஸ் சென்று கொண்டிருக்கும்போதே இறங்கு இறங்கு என அவரை இறங்க சொல்லியுள்ளார்.
அப்போது, இறங்க முற்பட்ட மாணவன் பேருந்தில் இருந்து தவறி விழுந்துவிட்டார். இதில் அவரது வலது காலில் தொடைப்பகுதி, முழங்காலுக்கு மேல் வீக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து, மாணவனின் தந்தை நாகராஜ் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை (மேற்கு) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.