கோவையில் அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவன் படுகாயம்..! ஓடும் பேருந்தில் மாணவனை இறங்க கூறிய நடத்துநர், ஓட்டுநர் மீது வழக்கு!

மாணவனின் தந்தை கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பேருந்தில் இருந்து இறங்கும்போது வேகமாக பேருந்தை இயக்கியதால் பள்ளி மாணவன் தவறி விழுந்த சம்பவம் தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கார்த்திகேஷ்வரன் (15). கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த 7ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பும்போது கோவை காந்திபுரத்திலிருந்து-வாளையார் நோக்கிச் செல்லும் 96ம் எண் அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்து நடத்துனரிடம் பி.கே புதூர் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

அப்போது நடத்துநர், ‘‘பள்ளி மாணவர்களால் இதே தொந்தரவாக போய்விட்டது. காசு இல்லை என்றால் எதிலே வேண்டுமானாலும் ஏறுவது, எங்கே வேண்டுமானாலும் இறங்குவது’’ என கூறி கார்த்திகேஷ்வரனை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பி.கே புதூர் நிறுத்தம் அருகே வந்தபோது, பஸ் சென்று கொண்டிருக்கும்போதே இறங்கு இறங்கு என அவரை இறங்க சொல்லியுள்ளார்.

அப்போது, இறங்க முற்பட்ட மாணவன் பேருந்தில் இருந்து தவறி விழுந்துவிட்டார். இதில் அவரது வலது காலில் தொடைப்பகுதி, முழங்காலுக்கு மேல் வீக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மாணவனின் தந்தை நாகராஜ் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை (மேற்கு) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...