ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி கோவை தொழிலதிபரிடம் ரூ.22.81 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை

ஒரு கோடி கடன் தருவதற்கு ரூ.22.81 லட்சம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று கூறி மோசடி செய்ததாக, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த தமிழரசு (54) என்பவர் குற்றச்சாட்டு.

ஒரு கோடி கடன் தருவதற்கு ரூ.22.81 லட்சம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று கூறி தன்னை ஒரு நபர் மோசடி செய்ததாக, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த தமிழரசு (54) என்பவர் கோவை சைபர் கிரைம் போலீசார் புகார் அளித்துள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் அருகேயுள்ள, விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் தமிழரசு (54). இவர், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில்

கூறியிருப்பதாவது: நான் சொந்தமாக லாரி ஒர்க் ஷாப் தொழில் செய்து வருகிறேன். கடந்த மே மாதம் எனது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய நபர், எனது தொழிலின் வளர்ச்சிக்காக ரூ.1 கோடி வரை கடன் வழங்குவதாக கூறினார்.

முதலில் கடன் வாங்க வேண்டாம் என நினைத்திருந்த நான், தொடர்ந்து அந்த நபர் வற்புறுத்தியதால், வேறு வழியின்றி கடன் பெற முடிவு செய்தேன். இதைத் தொடர்ந்து அந்த நபர், ரூ.22.81 லட்சம் தொகையை முன்வைப்புத் தொகையாக செலுத்தினால், ரூ.1 கோடி கடன் தொகையை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம், என்றார். மேலும், முன்வைப்புத் தொகையை ஆன்லைன் மூலம் விரைவாக கட்டவில்லை என்றால், கடன் தொகையை பெற முடியாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நான் அந்த நபர் கூறியபடி ரூ.22 லட்சத்து 81 ஆயிரத்து 879 தொகையை ஆன்லைன் மூலம், அவருக்கு அனுப்பி வைத்தேன். தொகையை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் பணம் வராததால், சந்தேகமடைந்த நான், அந்த நபர் கூறிய எண்ணைத் தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து, நான் அந்த நபர் கூறிய நிறுவனத்துக்கு நேரில் சென்று விசாரித்த போது, அப்படி ஒருவர் அங்கு வேலை செய்யவில்லை எனத் தெரிய வந்தது. நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, மர்ம நபர் நூதன முறையில் பணத்தை பெற்று மோசடி செய்தது அதன் பின்னரே தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியிருந்தார். இதுதொடர்பாக, மாநகர சைபர் கிரைம் போலீஸார், அடையாளம் தெரியாத அந்த நபர் மீது மோசடி பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...