பாலியல் தொல்லை, குடிகார கணவன்: திருப்பூரில் 'மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்'- பெற்றோர் தர்ணா போராட்டம்.!!

மகளின் சாவுக்குக் காரணமான கணவன் மற்றும் அவரது தந்தையை கைது செய்யக்கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நீதிகேட்டு தர்ணா போராட்டம்.


திருப்பூர்: மகளின் சாவுக்கு நீதி கேட்டு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் புதுக்காலனி நவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 5-ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பிரபு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2- குழந்தைகளும் உள்ளனர்.

இந்தநிலையில் பிரபு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் பிரபுவின் தந்தை ஆறுமுகம் நந்தினிக்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நந்தினி கணவரிடம் கூறியபோது அவர் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக நந்தினி பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் இதுதொடர்பாக ஆறுமுகத்திடம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் நந்தினியின் நடத்தை குறித்து மகனிடம் தவறாகக் கூறி அவர்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி இரவு நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் நந்தினியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்குச் சென்று பார்த்தபோது ரத்த காயங்களுடன் நந்தினி பிணமாகக் கிடந்துள்ளார்.

இதுகுறித்து குன்னத்தூர் போலீசில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக நந்தினி பெற்றோர் புகார் செய்துள்ளனர். காவல்துறை தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஆர்.டிஒ. விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மகளின் சாவுக்குக் காரணமான பிரபு மற்றும் அவரது தந்தை ஆறுமுகத்தைக் கைது செய்யக்கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நந்தினியின் சாவுக்கு நீதிகேட்டும் சாவுக்குக் காரணமானவர்களைக் கைது செய்யக்கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்து பேச்சுவார்த்தையில், ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறை காலில் விழுந்து கெஞ்சியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...