கிணத்துக்கடவு அருகே கோடங்கி பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள கொடிக்கம்பத்தில் தகர வாளியை ஏற்றி சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கோடங்கி பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள கொடிக்கம்பத்தில் தகர வாளியை ஏற்றி சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கி பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளி திறக்கப்படாமல் பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் சமூக விரோதிகள் தகர வாளியை ஏற்றி இருப்பதும், பள்ளி சுவரில் உள்ள அறிவிப்புப் பலகையில் சேற்றை பூசி அட்டகாசம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து ஊராட்சி நிர்வாகம் தண்டோரா மூலம் இனிமேல் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கி பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளி திறக்கப்படாமல் பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் சமூக விரோதிகள் தகர வாளியை ஏற்றி இருப்பதும், பள்ளி சுவரில் உள்ள அறிவிப்புப் பலகையில் சேற்றை பூசி அட்டகாசம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து ஊராட்சி நிர்வாகம் தண்டோரா மூலம் இனிமேல் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.