கோத்தகிரியில் படுகர் இன மக்கள் இந்து அறநிலையத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!!

கோத்தகிரியில் உள்ள வீர சிவாஜி திடலில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்துவதைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


நீலகிரி: கோத்தகிரியில் உள்ள வீர சிவாஜி திடலில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்துவதைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

கோத்தகிரி அருகே படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவிலைப் படுகர் இன மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலையத்துறை இந்த கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அறிவிப்புப் பலகை கொண்டு வந்து நோட்டிஸ் ஒட்டியுள்ளனர்.

இதனால் படுகர் கிராம மக்கள் கொதிப்படைந்தனர்.



பின்பு முதற்கட்டமாக எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இந்து அறநிலையத்துறை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து கலாச்சாரம் தெரியாத நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.



மேலும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டமானது தொடர்ந்து நடத்தினர்.



மேலும் கலாச்சார பாடல்களைப் பாடி தங்களது கலாச்சாரத்தைச் சீரழிக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து அறநிலையத்துறை உடனடியாக பாரம்பரிய கோயிலை மீட்பு நடவடிக்கையைக் கைவிடுமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...