அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும்- சிஐடியூ

அரசு ஊழியர்களுக்குக் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என திருப்பூரில் சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அரசு ஊழியர்களுக்குக் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என திருப்பூரில் சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சிஐடியு மாநிலக்குழு கூட்டம் திருப்பூர் அவிநாசி சாலையில், உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் கடந்த 2-தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு தொழிற் சங்க மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சௌந்தரராஜன் தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க நிறுவனங்கள் மறுத்து வருவதாகவும் இதில் அரசு தலையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு 676-ரூபாய் குறைந்தபட்ச கட்டணம் என்பது அரசாணையில் உள்ள சூழ்நிலையில் தற்போது 391-ரூபாய் மட்டும் என்பது அடித்தட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கை எனவும், ஏற்கனவே அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா நிதி ஆதாரத்தைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு அதிமுக அரசு தொழிலாளர்களுக்கு வழங்கிவந்த 20-சதவீத போனசை குறைத்து 10-சதவீதமாக வழங்கியதாகவும், இந்த ஆண்டு கூடுதலாக 20- சதவீத போனஸ் வழங்க வேண்டும் எனவும் அதனைத் தீபாவளி பண்டிகைக்கு 15-தினங்களுக்கு முன்பாக கண்டிப்பாக வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

திருப்பூரில் பெண்களுக்கு வார விடுமுறையைக் கட்டாயமாக்கி உறுதி செய்திட வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை விசாரிக்க விசாகா கமிட்டி அமைத்துத் தர வேண்டும் எனவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். அது வரையில் மதுவினால் வரும் வருமானத்தில் 5-சதவீதத்தை விழிப்புணர்வு மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து தொழிலாளர்களை விடுவிக்கத் தேவையான மருத்துவ உதவிக்காகச் செலவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...