அய்யர்பாடி எஸ்டேட்டில் கரடிகள் நடமாட்டம்: அச்சத்தில் தோட்டத் தொழிலாளர்கள்.!!

வால்பாறை, அய்யர்பாடி எஸ்டேட்டில் மீண்டும் கரடி நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறை, அய்யர்பாடி எஸ்டேட்டில் மீண்டும் கரடி நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறையில் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து, தற்போது கரடிகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.தேயிலைத் தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடிகள் தொழிலாளர்களைத் தாக்குவதுடன், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

இதனால் அச்சத்துடன் வேலைக்குச் சென்று வருகின்றனர். வால்பாறை அய்யர்பாடி துணை மின் நிலையம் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தாய்கரடி, இரண்டு குட்டிகளுடன் நடமாடியதைக் கண்ட தொழிலாளர்கள் வனத் துறையினருக்குத்தகவல் தெரிவித்தனர்.

அப்பகுதியில் நடமாடும் கரடிகளை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...