வால்பாறை, அய்யர்பாடி எஸ்டேட்டில் மீண்டும் கரடி நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை: வால்பாறை, அய்யர்பாடி எஸ்டேட்டில் மீண்டும் கரடி நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறையில் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து, தற்போது கரடிகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.தேயிலைத் தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடிகள் தொழிலாளர்களைத் தாக்குவதுடன், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
இதனால் அச்சத்துடன் வேலைக்குச் சென்று வருகின்றனர். வால்பாறை அய்யர்பாடி துணை மின் நிலையம் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தாய்கரடி, இரண்டு குட்டிகளுடன் நடமாடியதைக் கண்ட தொழிலாளர்கள் வனத் துறையினருக்குத்தகவல் தெரிவித்தனர்.
அப்பகுதியில் நடமாடும் கரடிகளை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து, தற்போது கரடிகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.தேயிலைத் தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடிகள் தொழிலாளர்களைத் தாக்குவதுடன், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
இதனால் அச்சத்துடன் வேலைக்குச் சென்று வருகின்றனர். வால்பாறை அய்யர்பாடி துணை மின் நிலையம் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தாய்கரடி, இரண்டு குட்டிகளுடன் நடமாடியதைக் கண்ட தொழிலாளர்கள் வனத் துறையினருக்குத்தகவல் தெரிவித்தனர்.
அப்பகுதியில் நடமாடும் கரடிகளை வனத் துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.