மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவையில் கடைக்கு வாடகை கொடுக்க முடியாததால் கடையைப் பூட்டி டெய்லர் கடைக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அருகே டெய்லர் கடை நடத்தி வந்த நபர் கடை வாடகை கொடுக்க முடியாத காரணத்தினால் மன உளைச்சல் அடைந்து இன்று மதியம் கடையைப் பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆலந்துறை மாரிசெட்டி தெரு பகுதியில் வசிப்பவர் திவாகர் வயது 55, இவருக்கு பிரீத்தா என்ற ஒரு மனைவி உள்ளார். இவர் போளுவாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே அம்மு என்ற பெயரில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். தீபாவளி நெருங்கி வருவதால் வேலை குறைவாக இருந்ததால் இரண்டு மாதங்களாகக் கடைக்கு வாடகை கொடுக்க முடியவில்லை.
அதனால் கடந்த சில நாட்களாக தன்னுடைய மனைவி பிரீத்தாவிடம் கடை வாடகை கொடுக்க முடியவில்லை என புலம்பி மன உளைச்சலிலிருந்து உள்ளார்.

அவர் கடைக்கு மதியம் சென்றவர் கடையைப் பூட்டிக் கொண்டு டெய்லர் கடைக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி பிரீத்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலந்துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 174-சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை அருகே டெய்லர் கடை நடத்தி வந்த நபர் கடை வாடகை கொடுக்க முடியாத காரணத்தினால் மன உளைச்சல் அடைந்து இன்று மதியம் கடையைப் பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆலந்துறை மாரிசெட்டி தெரு பகுதியில் வசிப்பவர் திவாகர் வயது 55, இவருக்கு பிரீத்தா என்ற ஒரு மனைவி உள்ளார். இவர் போளுவாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே அம்மு என்ற பெயரில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். தீபாவளி நெருங்கி வருவதால் வேலை குறைவாக இருந்ததால் இரண்டு மாதங்களாகக் கடைக்கு வாடகை கொடுக்க முடியவில்லை.
அதனால் கடந்த சில நாட்களாக தன்னுடைய மனைவி பிரீத்தாவிடம் கடை வாடகை கொடுக்க முடியவில்லை என புலம்பி மன உளைச்சலிலிருந்து உள்ளார்.
அவர் கடைக்கு மதியம் சென்றவர் கடையைப் பூட்டிக் கொண்டு டெய்லர் கடைக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி பிரீத்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலந்துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 174-சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.