கோவையில் நகை திருடி சிறைக்கு சென்று ஜாமீனில் வந்தவர் மீண்டும் நகை திருடி கைது.!!

கடந்த மாதம் 15-ந் தேதி செல்வபுரத்தில் ஒரு வீட்டில் 20-பவுன் நகையை திருடி கைது செய்யப்பட்டு சிறை சென்று கடந்த வாரத்தில் ஜாமீனில் வெளியே வந்ததும், மீண்டும் தற்போது நகை திருடியது தெரிய வந்தது.


கோவை: நகை திருட்டு வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டன.

தீபாவளி பண்டிகையொட்டி கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த கூட்டத்தைப் பயன்படுத்தி நகை, பணம் திருடுபவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்படையைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் தலைமைக் காவலர்கள் உமா, கார்த்திக், பூபதி ஆகியோர் கோவை ராஜவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார். அத்துடன் அவர் வைத்திருந்த பையில் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தன.

இதனால் போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (28) என்பதும் செல்வபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடிய நகை மற்றும் வெள்ளி பொருட்களை விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்வராஜ் கடந்த மாதம் 15-ந் தேதி செல்வபுரத்தில் ஒரு வீட்டில் 20 பவுன் நகையை திருடி கைது செய்யப்பட்டு சிறை சென்று கடந்த வாரத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்ததும், அதன் பின்னர், மீண்டும் தற்போது நகை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...