பொள்ளாச்சியில் கனமழையால் இடிந்து விழுந்த வீடு.!!

பொள்ளாச்சி அருகே திவான்சா புதூரில் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 70-வயது முதியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே திவான்சா புதூரில் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 70-வயது முதியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதே போல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழக கேரளப் பகுதியை ஒட்டியுள்ள பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக புது காலனியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழும் சத்தம் கேட்டு சுதாரித்துக்கொண்ட சுகன்யா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டார்.



அப்போது வீடு இடிந்து தரை மட்டமானது.

இடிபாடுகளில் சிக்கிய 70-வயது முதியவர் சுப்பிரமணியை அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர்.



வீடு இடிந்து விழுந்ததில் வீட்டிலிருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்தது இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...