பொள்ளாச்சி அருகே திவான்சா புதூரில் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 70-வயது முதியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அருகே திவான்சா புதூரில் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 70-வயது முதியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதே போல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழக கேரளப் பகுதியை ஒட்டியுள்ள பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக புது காலனியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழும் சத்தம் கேட்டு சுதாரித்துக்கொண்ட சுகன்யா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டார்.

அப்போது வீடு இடிந்து தரை மட்டமானது.
இடிபாடுகளில் சிக்கிய 70-வயது முதியவர் சுப்பிரமணியை அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர்.

வீடு இடிந்து விழுந்ததில் வீட்டிலிருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்தது இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதே போல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழக கேரளப் பகுதியை ஒட்டியுள்ள பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக புது காலனியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழும் சத்தம் கேட்டு சுதாரித்துக்கொண்ட சுகன்யா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டார்.
அப்போது வீடு இடிந்து தரை மட்டமானது.
இடிபாடுகளில் சிக்கிய 70-வயது முதியவர் சுப்பிரமணியை அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர்.
வீடு இடிந்து விழுந்ததில் வீட்டிலிருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்தது இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.