நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 27-ம் தேதி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்.!!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய மாணவர் சங்கம் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பில் கூறியதாவது:-



பாஜக அரசின் கல்வி தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நீட் தேர்வு காரணமாக 22 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். தமிழக அரசு நீட் விலக்கு சட்ட மசோதா இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்காகக் காத்து இருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டதாகவும் இப்போதும் ஆளுநர் சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் கையெழுத்திடாமல் இருப்பதன் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றார்.

தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு தொடர்ச்சியாக உடைக்கப்படுவதாகவும் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுவதால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மத்தியக் குழு அக்டோபர் 27-ம் தேதி இந்தியா முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தமிழகத்தில் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒட்டுமொத்தமாகக் கல்வித் துறையை மோசமான நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியவர் ஒன்றிய அரசின் தேசிய கொள்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.



3,8,5-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் வைக்கப்பட வேண்டும் என்பதை மாற்றி வினாடி-வினா என்ற தேசிய கொள்கையையும் அனுமதிக்க முடியாது என்றார். இல்லங்களுக்குக் கல்வியைக் கொண்டு செல்லும் விதமாக மக்கள் கல்வி என்ற பெயரில் 200-கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு நவம்பரில் பள்ளிகள் துவக்கப்படும் என்ற தேசிய கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் தமிழகத்திற்கு எனத் தனியாகக் கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும் என்றார். அரசு கல்லூரிகள் துவங்கப்பட்டாலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர் எனவும் கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட 10-கல்லூரிகளில் தற்போது வரை ஒரு துறைக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும் தற்போது வரை அதே நிலை தொடர்வதாகக் கூறிய அவர் தமிழகத்தில் 35- கல்லூரிகளில் முதல்வர்களே இல்லாத நிலை தொடர்வதாகத் தெரிவித்தார்.

153-அரசு கல்லூரிகளில் 7000-ஆசிரியர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக நியமனம் செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிவித்தவர் அரசுக் கல்வி நிறுவனங்களைப் பாதுகாக்க அரசு உடனடியாக முன் வரவேண்டும் எனவும் தேசிய கல்விக் கொள்கையை வேறு ஒரு பெயரில் செயல் பட முயல்வதை இந்திய மாணவர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...