திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி போடப்பட்டிருந்த சாலையோர கடைகள் அகற்றம்..!

மீண்டும் சாலையோரத்தில் கடைகள் வைத்தால் கடும் நடவடிக்கை என்று மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை அருகே மற்றும் திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி போடப்பட்டிருந்த சாலையோர கடைகள் அகற்றப்பட்டது.

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் உழவர் சந்தை திட்டத்தை அமல்படுத்தினார்.

இதன்படி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை உழவர் சந்தையில் தாங்களே விற்பனை செய்து கொள்ளலாம் இடைத்தரகர்கள் தலையீடு இருக்காது. இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் 120 கடைகள் செயல்பட்டு வருகிறது இருப்பினும் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கு வியாபாரம் செய்ய பதிவு செய்துள்ளனர்.

ஆனால், சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியிலேயும் திருப்பூர் பல்லடம் சாலையோரத்திலும் வியாபாரிகள் காய்கறி கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதுமட்டுமின்றி சாலையோர கடைகளால் தென்னம்பாளையம் பகுதியில் அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசலும் இருந்து வந்தது.

எனவே, சாலையோரக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை அப்புறப்படுத்தினர். மேலும் இனிமேல் சாலையோர கடைகள் அமைக்கக் கூடாது என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் விடுத்தனர்.



பின்னர், சாலையோர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதை மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர கடைகள் அனைத்தும் தற்போது அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாநகராட்சி உத்தரவை மீறி மீண்டும் சாலையோர கடைகள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...