ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்: இரண்டு நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு.!!

ஓடை வெள்ளத்தில் சிக்கிய பெண்ணின் உடல் நீண்ட தேடலுக்குப் பிறகு சேற்றில் சிக்கிய நிலையில், இரண்டு நாள் போராட்டத்திற்குப் பிறகு சென்னனூர் குட்டையிலிருந்து இன்று மீட்கப்பட்டது.


கோவை: ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் இரண்டு நாள் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஒரத்திமலையில் இருந்து உருவாகும் பள்ள ஓடை, மத்திபாளையம் வழியாக, சென்னனூர் குட்டைக்குச் செல்கிறது. இதில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்த கனமழையால் இப்பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் மத்திபாளையம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த விஜயா (55) மற்றும் மூன்று பேர், நேற்று முன் தினம் தோட்ட வேலைக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும்போது ஓடையில் இறங்கி சாலைக்கு வரும் போது, மழை வெள்ளத்தில் விஜயா அடித்துச் செல்லப்பட்டார்.

உடனடியாக, அருகிலிருந்தவர்கள், தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து நேற்று முன்தினம் இரவு 7:30 மணி வரை தீயணைப்பு வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர்.

தொடர் மழை, போதிய வெளிச்சமின்மையால், தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்னிலையில் மீண்டும் நேற்று காலை முதல் பெண்ணின் உடலைத் தேடும் பணி நடைபெற்றுத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஓடை மற்றும் குட்டையில் சுமார் 20-ஏக்கர் பரப்பளவு தேடியும் பெண்ணின் உடல் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து இன்று காலை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு உடலைத் தேடும் பணி நடைபெற்றது.



நீண்ட தேடலுக்குப் பிறகு சேற்றில் சிக்கிய நிலையில், இரண்டு நாள் போராட்டத்திற்குப் பிறகு விஜயாவின் உடல் சென்னனூர் குட்டையிலிருந்து இன்று மீட்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...