ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்: இரண்டு நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு.!!

ஓடை வெள்ளத்தில் சிக்கிய பெண்ணின் உடல் நீண்ட தேடலுக்குப் பிறகு சேற்றில் சிக்கிய நிலையில், இரண்டு நாள் போராட்டத்திற்குப் பிறகு சென்னனூர் குட்டையிலிருந்து இன்று மீட்கப்பட்டது.


கோவை: ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் இரண்டு நாள் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஒரத்திமலையில் இருந்து உருவாகும் பள்ள ஓடை, மத்திபாளையம் வழியாக, சென்னனூர் குட்டைக்குச் செல்கிறது. இதில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்த கனமழையால் இப்பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் மத்திபாளையம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த விஜயா (55) மற்றும் மூன்று பேர், நேற்று முன் தினம் தோட்ட வேலைக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும்போது ஓடையில் இறங்கி சாலைக்கு வரும் போது, மழை வெள்ளத்தில் விஜயா அடித்துச் செல்லப்பட்டார்.

உடனடியாக, அருகிலிருந்தவர்கள், தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து நேற்று முன்தினம் இரவு 7:30 மணி வரை தீயணைப்பு வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர்.

தொடர் மழை, போதிய வெளிச்சமின்மையால், தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்னிலையில் மீண்டும் நேற்று காலை முதல் பெண்ணின் உடலைத் தேடும் பணி நடைபெற்றுத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஓடை மற்றும் குட்டையில் சுமார் 20-ஏக்கர் பரப்பளவு தேடியும் பெண்ணின் உடல் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து இன்று காலை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு உடலைத் தேடும் பணி நடைபெற்றது.



நீண்ட தேடலுக்குப் பிறகு சேற்றில் சிக்கிய நிலையில், இரண்டு நாள் போராட்டத்திற்குப் பிறகு விஜயாவின் உடல் சென்னனூர் குட்டையிலிருந்து இன்று மீட்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...