திருப்பூரில் கொலை குற்றவாளியை கைது செய்யாத போலீசாரை கண்டித்தும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி இறந்தவரின் குடும்பத்தார் ஆட்சியரிடம் மனு..!

கொலை நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் போலீசார் இதுவரை கொலையாளிகளை பிடிப்பதில் தாமதம் காட்டி வருவதாகவும், விபத்து என கூறி வழக்கை முடிக்க இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் கொலை குற்றவாளியை கைது செய்யாத போலீசாரை கண்டித்தும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் இறந்தவரின் குடும்பத்தார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த வீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - மாரியம்மாள் தம்பதியரின் மகன் கோபிநாத். இவர் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மடத்துப்பாளையம் என்ற பகுதியில் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.



இதனிடையே, கொலை நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் போலீசார் இதுவரை கொலையாளிகளை பிடிப்பதில் தாமதம் காட்டி வருவதாகவும், மேலும் விபத்து என கூறி வழக்கை முடிக்க இருப்பதாகவும் கூறும் கோபிநாத்தின் பெற்றோர் உடனடியாக கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் அல்லது வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



மேலும், இப்பிரச்சனையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தற்கொலை செய்யப்போவதாக கோரி, கொலை செய்யப்பட்ட கோபிநாத்தின் பெற்றோர் கண்ணீர் மல்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...