கொலை நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் போலீசார் இதுவரை கொலையாளிகளை பிடிப்பதில் தாமதம் காட்டி வருவதாகவும், விபத்து என கூறி வழக்கை முடிக்க இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் கொலை குற்றவாளியை கைது செய்யாத போலீசாரை கண்டித்தும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் இறந்தவரின் குடும்பத்தார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த வீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - மாரியம்மாள் தம்பதியரின் மகன் கோபிநாத். இவர் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மடத்துப்பாளையம் என்ற பகுதியில் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கொலை நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் போலீசார் இதுவரை கொலையாளிகளை பிடிப்பதில் தாமதம் காட்டி வருவதாகவும், மேலும் விபத்து என கூறி வழக்கை முடிக்க இருப்பதாகவும் கூறும் கோபிநாத்தின் பெற்றோர் உடனடியாக கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் அல்லது வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், இப்பிரச்சனையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தற்கொலை செய்யப்போவதாக கோரி, கொலை செய்யப்பட்ட கோபிநாத்தின் பெற்றோர் கண்ணீர் மல்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த வீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - மாரியம்மாள் தம்பதியரின் மகன் கோபிநாத். இவர் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மடத்துப்பாளையம் என்ற பகுதியில் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கொலை நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் போலீசார் இதுவரை கொலையாளிகளை பிடிப்பதில் தாமதம் காட்டி வருவதாகவும், மேலும் விபத்து என கூறி வழக்கை முடிக்க இருப்பதாகவும் கூறும் கோபிநாத்தின் பெற்றோர் உடனடியாக கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் அல்லது வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், இப்பிரச்சனையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தற்கொலை செய்யப்போவதாக கோரி, கொலை செய்யப்பட்ட கோபிநாத்தின் பெற்றோர் கண்ணீர் மல்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.