செட்டிபாளையம் மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த நாய்களுக்கு விஷம் வைத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை: செட்டிபாளையம் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த நாய்களுக்கு விஷம் வைத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
செட்டிபாளையம் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த ரஃபேல் என்பவரின் மகன் பிரான்சிஸ்(49). டிரைவரான இவர் தெருவில் சுற்றும் நாய்களுக்கு உணவு அளிப்பது வழக்கம்.
இதனால் இவரது வீட்டின் முன்பு எப்போதும் 15-முதல் 20-நாய்கள் உணவுக்காகக் காத்திருக்கும். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் முகமது உக்காசா(27). இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
பக்கத்து வீட்டில் பிரான்சிஸ் நாய்களை வளர்த்து வருவது முகமது உக்காசாவுக்கு பிடிக்கவில்லை. ஒரு சில நேரங்களில் நாய்கள் ஆடுகளை கடித்து விடுவதாகப் புகார் எழுந்தது. இதனால் ஆத்திரத்திலிருந்து வந்த முகமது உக்காஷா தெருநாய்களுக்கு விஷம் வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஒரு சில நாய்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இதை அறிந்த பிரான்சிஸ் செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நாய்களுக்கு விஷம் வைத்ததாக முகம்மது உக்காவைக் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
செட்டிபாளையம் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த ரஃபேல் என்பவரின் மகன் பிரான்சிஸ்(49). டிரைவரான இவர் தெருவில் சுற்றும் நாய்களுக்கு உணவு அளிப்பது வழக்கம்.
இதனால் இவரது வீட்டின் முன்பு எப்போதும் 15-முதல் 20-நாய்கள் உணவுக்காகக் காத்திருக்கும். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் முகமது உக்காசா(27). இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
பக்கத்து வீட்டில் பிரான்சிஸ் நாய்களை வளர்த்து வருவது முகமது உக்காசாவுக்கு பிடிக்கவில்லை. ஒரு சில நேரங்களில் நாய்கள் ஆடுகளை கடித்து விடுவதாகப் புகார் எழுந்தது. இதனால் ஆத்திரத்திலிருந்து வந்த முகமது உக்காஷா தெருநாய்களுக்கு விஷம் வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஒரு சில நாய்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இதை அறிந்த பிரான்சிஸ் செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நாய்களுக்கு விஷம் வைத்ததாக முகம்மது உக்காவைக் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.