தொடர்ந்து காலை முதல், கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாருக்கு சொந்தமான வீட்டில் சோதனை..!

கோவை ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள எஸ்.என்.வி. கார்டன் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் மாமனாருக்கு சொந்தமான வீட்டிலும் காலை 6 மணி முதல் பெண் அதிகாரி உட்பட 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.


கோவை: தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், என 43 இடங்களில் இச்சோதனையானது நடைபெற்று வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதை தொடர்ந்து, அவருடைய இல்லம், அலுவலகம் அவரது உறவினர்கள் இல்லங்கள் ஆகிய இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி., கார்டன் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவின் தந்தைக்கு சொந்தமான வீட்டிலும் காலை 6 மணி முதல் பெண் அதிகாரி உட்பட 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை வரும்போது, இந்த வீட்டில் தங்குவது வழக்கம் என கூறப்படும் நிலையில், அதனடிப்படையில், சோதனையானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...