கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 26.5 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது..!

ஈச்சனாரி ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 26.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், 4 பேர் கைது செய்தனர்.

கோவையில் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை தடுப்பதற்காக மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல் துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று போத்தனூர் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார், ஈச்சனாரி ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த மாயன் (51), தேனி ஆண்டிப்பட்டி கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (49), கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி (62) என்பதும் மூவரும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து, அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

இதேபோல, கஞ்சா விற்பதாக உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயவீரன் (53), என்பவரை சாய்பாபா காலனி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...