கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 26.5 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது..!

ஈச்சனாரி ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 26.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், 4 பேர் கைது செய்தனர்.

கோவையில் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை தடுப்பதற்காக மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல் துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று போத்தனூர் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார், ஈச்சனாரி ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த மாயன் (51), தேனி ஆண்டிப்பட்டி கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (49), கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி (62) என்பதும் மூவரும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து, அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

இதேபோல, கஞ்சா விற்பதாக உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயவீரன் (53), என்பவரை சாய்பாபா காலனி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...