அதிமுகவின் பொன்விழா: வால்பாறை நகரக் கழகத்தின் சார்பில் கொண்டாட்டம்.!!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-வது ஆண்டு பொன் விழா வால்பாறை நகரக் கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு வால்பாறை அ.இ.அ.தி.மு.க நகர கழக செயலாளர் மயில் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.


வால்பாறை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-வது ஆண்டு பொன் விழா வால்பாறை நகரக் கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை. அ.இ.அ.தி.மு.க நகரக் கழகத்தின் சார்பாக வால்பாறை ரொட்டிகடை பகுதியில் அமைந்திருக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு வால்பாறை அ.இ.அ.தி.மு.க நகர கழக செயலாளர் மயில் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் வீ.அமீது மாநில தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க கூட்டுக்குழு தலைவர் முன்னிலை வகித்தார். மேலும் விழாவில் நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், வரவேற்பு உரையாற்றினார்.

நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சுடர்பாலு மற்றும் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர். நரசப்பன் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர். வர்த்தக அணி செயலாளர் சண்முகவேலு நன்றியுரை கூறினார்.



இந்நிகழ்வில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மிக்சர்கடை முருகன், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஆர்.ஆர்.சசிக்குமார், அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.கே.எஸ் பாலு, கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், பாபு எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் விமலா நகர இணைச்செயலாளர் ராணி, வீரமணி மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் முருகையா, மணிகண்டன், சுரேஷ்குமார், செந்தூரபாண்டி, முத்துக்குமார், மதியாபரணம், கழக நகர நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து கழக வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்று விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...