கோவையில் செல்போன் வெடித்து படுக்கையில் தீ பிடித்து கல்லூரி மாணவர் சாவு.!!

மதுக்கரை அடுத்த காந்திநகரில் குடிபோதையில் செல்போனை சார்ஜ் போட்டு படுக்கையில் வைத்து வெகுநேரம் செல்போனை பார்த்துக் கொண்டு அப்படியே தூங்கிய நிலையில், நள்ளிரவில் திடீரென செல்போன் சூடாகி தீ பிடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.


கோவை: மதுக்கரை அடுத்த காந்திநகரில் குடிபோதையில் செல்போனை சார்ஜ் போட்டு படுக்கையில் வைத்து வெகுநேரம் செல்போனை பார்த்துக் கொண்டு அப்படியே தூங்கிய நிலையில், நள்ளிரவில் திடீரென செல்போன் சூடாகி தீ பிடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (57) .கூலி வேலை செய்துவரும் இவரது மகன் சிவராம் (18). சிவராம் கோவை புதூர் பகுதியில் உள்ள ஆதித்யா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி முதலாமாண்டு படித்து வந்தார்.

சிவராமுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராம் குடிபோதையில் வீட்டில் தனது அறையில் படுத்து தூங்கினார். முன்னதாக செல்போனை சார்ஜ் போட்டு அதை தனது படுக்கையில் வைத்து வெகுநேரம் செல்போனை பார்த்துக் கொண்டு அப்படியே தூங்கி விட்டார்.

நள்ளிரவில் திடீரென செல்போன் சூடாகி தீ பிடித்தது. அதில் சிவராம் படுத்து இருந்த படுக்கையிலும் தீப்பிடித்தது. சிவராம் குடிபோதையில் இருந்ததால் படுக்கையில் தீப்பிடித்ததை அவரால் உணர முடியவில்லை. தீ மளமளவென பற்றி எரிந்து சிவராம் உடுத்தியிருந்த ஆடைகள் மற்றும் படுக்கை முழுவதும் தீ பரவியது.

அப்போது திடுக்கிட்டு சிவராம் எழுவதற்குள் சிவராம் உடலிலும் தீ பிடித்தது. அவரது சத்தம் கேட்டு அவரது குடும்பத்தார் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிவராமுக்கு உடல் முழுவதும் அதிக அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிவராம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை மயில்சாமி மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...