மதுக்கரை அடுத்த காந்திநகரில் குடிபோதையில் செல்போனை சார்ஜ் போட்டு படுக்கையில் வைத்து வெகுநேரம் செல்போனை பார்த்துக் கொண்டு அப்படியே தூங்கிய நிலையில், நள்ளிரவில் திடீரென செல்போன் சூடாகி தீ பிடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கோவை: மதுக்கரை அடுத்த காந்திநகரில் குடிபோதையில் செல்போனை சார்ஜ் போட்டு படுக்கையில் வைத்து வெகுநேரம் செல்போனை பார்த்துக் கொண்டு அப்படியே தூங்கிய நிலையில், நள்ளிரவில் திடீரென செல்போன் சூடாகி தீ பிடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கோவை மதுக்கரை அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (57) .கூலி வேலை செய்துவரும் இவரது மகன் சிவராம் (18). சிவராம் கோவை புதூர் பகுதியில் உள்ள ஆதித்யா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி முதலாமாண்டு படித்து வந்தார்.
சிவராமுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராம் குடிபோதையில் வீட்டில் தனது அறையில் படுத்து தூங்கினார். முன்னதாக செல்போனை சார்ஜ் போட்டு அதை தனது படுக்கையில் வைத்து வெகுநேரம் செல்போனை பார்த்துக் கொண்டு அப்படியே தூங்கி விட்டார்.
நள்ளிரவில் திடீரென செல்போன் சூடாகி தீ பிடித்தது. அதில் சிவராம் படுத்து இருந்த படுக்கையிலும் தீப்பிடித்தது. சிவராம் குடிபோதையில் இருந்ததால் படுக்கையில் தீப்பிடித்ததை அவரால் உணர முடியவில்லை. தீ மளமளவென பற்றி எரிந்து சிவராம் உடுத்தியிருந்த ஆடைகள் மற்றும் படுக்கை முழுவதும் தீ பரவியது.
அப்போது திடுக்கிட்டு சிவராம் எழுவதற்குள் சிவராம் உடலிலும் தீ பிடித்தது. அவரது சத்தம் கேட்டு அவரது குடும்பத்தார் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிவராமுக்கு உடல் முழுவதும் அதிக அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிவராம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை மயில்சாமி மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மதுக்கரை அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (57) .கூலி வேலை செய்துவரும் இவரது மகன் சிவராம் (18). சிவராம் கோவை புதூர் பகுதியில் உள்ள ஆதித்யா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி முதலாமாண்டு படித்து வந்தார்.
சிவராமுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராம் குடிபோதையில் வீட்டில் தனது அறையில் படுத்து தூங்கினார். முன்னதாக செல்போனை சார்ஜ் போட்டு அதை தனது படுக்கையில் வைத்து வெகுநேரம் செல்போனை பார்த்துக் கொண்டு அப்படியே தூங்கி விட்டார்.
நள்ளிரவில் திடீரென செல்போன் சூடாகி தீ பிடித்தது. அதில் சிவராம் படுத்து இருந்த படுக்கையிலும் தீப்பிடித்தது. சிவராம் குடிபோதையில் இருந்ததால் படுக்கையில் தீப்பிடித்ததை அவரால் உணர முடியவில்லை. தீ மளமளவென பற்றி எரிந்து சிவராம் உடுத்தியிருந்த ஆடைகள் மற்றும் படுக்கை முழுவதும் தீ பரவியது.
அப்போது திடுக்கிட்டு சிவராம் எழுவதற்குள் சிவராம் உடலிலும் தீ பிடித்தது. அவரது சத்தம் கேட்டு அவரது குடும்பத்தார் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிவராமுக்கு உடல் முழுவதும் அதிக அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிவராம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை மயில்சாமி மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.