டெங்கு : கோவை அரசு மருத்துவமனையில் 2-போ் அனுமதி.!!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு கோவையைச் சேர்ந்த 2-போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இருவருக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு 2-போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் டெங்கு பதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் வட கிழக்குப் பருவ மழைக் காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது டெங்குகாய்ச்சல் பரவி வருகிறது.

டெங்குகாய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள், சுகாதாரத் துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெங்கு கொசுப்புழுக்களை அழிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும், ஊரகப் பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுவீடாக ஆய்வு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு கோவையைச் சேர்ந்த 2-போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிர்மலா கூறியதாவது:-

இருவருக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து டெங்கு சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரையும் மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் மழைக் காலங்களில் டெங்கு பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...