வால்பாறையில் அதிமுகவின் பொன்விழா: கேக் வழங்கி கொண்டாட்டம்.!!

வால்பாறையில் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று நாடு முழுவதும் அதிமுகவினரால் கேக் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


வால்பாறை: வால்பாறையில் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று நாடு முழுவதும் அதிமுகவினரால் கேக் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று நாடுமுழுவதும் அதிமுகவினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் அண்ணா தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தொழிற்சங்க அலுவலகம் முன்புறம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திரு உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.



அண்ணா தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ. அமீது புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கட்சி நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் தொண்டர்கள் அம்மா வாழ்க என்று கோஷமிட்டனர். கட்சி உதயமான நாளை நினைத்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அண்ணா தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, அண்ணா திமுக கோவை மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன், மிக்சர் கடை முருகன், செந்தில் அண்ணா துரை, உருளிக்கல் கமாலுதீன், மாரிச்சாமி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...