வால்பாறையில் அதிமுகவின் பொன்விழா: கேக் வழங்கி கொண்டாட்டம்.!!

வால்பாறையில் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று நாடு முழுவதும் அதிமுகவினரால் கேக் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


வால்பாறை: வால்பாறையில் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று நாடு முழுவதும் அதிமுகவினரால் கேக் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று நாடுமுழுவதும் அதிமுகவினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் அண்ணா தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தொழிற்சங்க அலுவலகம் முன்புறம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திரு உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.



அண்ணா தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ. அமீது புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கட்சி நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் தொண்டர்கள் அம்மா வாழ்க என்று கோஷமிட்டனர். கட்சி உதயமான நாளை நினைத்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அண்ணா தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, அண்ணா திமுக கோவை மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன், மிக்சர் கடை முருகன், செந்தில் அண்ணா துரை, உருளிக்கல் கமாலுதீன், மாரிச்சாமி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...