கோவையில் சாமி சிலையை குடிபோதையில் சேதப்படுத்திய தொழிலாளி கைது.!!

கோவையில் கோடாலியால் கோவிலில் உள்ள எல்லைச்சாமி சிலையை குடிபோதையில் சேதப்படுத்திய நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையில் சாமி சிலையை குடிபோதையில் சேதப்படுத்திய நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தேவேந்திரன் வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முத்துக்குமார் என்பவர் பூசாரியாக உள்ளார்.

நேற்று இவர் கோவிலிலிருந்த போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரகுநாதன் வயது 23, என்பவர். கோடாலியால் கோவிலில் உள்ள எல்லைச்சாமி சிலையை உடைத்தார். இதைப் பார்த்த பூசாரி தடுக்க முயன்றார்.

ஆனால் அந்த வாலிபர் பூசாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து பூசாரி சத்தம் போட்டதால் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தது. சிலையை உடைத்துக் கொண்டிருந்த ரங்கநாதனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை சிங்காநல்லூர் காவல்துறை சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...