கோவையில் கோடாலியால் கோவிலில் உள்ள எல்லைச்சாமி சிலையை குடிபோதையில் சேதப்படுத்திய நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை: கோவையில் சாமி சிலையை குடிபோதையில் சேதப்படுத்திய நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தேவேந்திரன் வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முத்துக்குமார் என்பவர் பூசாரியாக உள்ளார்.
நேற்று இவர் கோவிலிலிருந்த போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரகுநாதன் வயது 23, என்பவர். கோடாலியால் கோவிலில் உள்ள எல்லைச்சாமி சிலையை உடைத்தார். இதைப் பார்த்த பூசாரி தடுக்க முயன்றார்.
ஆனால் அந்த வாலிபர் பூசாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து பூசாரி சத்தம் போட்டதால் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தது. சிலையை உடைத்துக் கொண்டிருந்த ரங்கநாதனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை சிங்காநல்லூர் காவல்துறை சிறையில் அடைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தேவேந்திரன் வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முத்துக்குமார் என்பவர் பூசாரியாக உள்ளார்.
நேற்று இவர் கோவிலிலிருந்த போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரகுநாதன் வயது 23, என்பவர். கோடாலியால் கோவிலில் உள்ள எல்லைச்சாமி சிலையை உடைத்தார். இதைப் பார்த்த பூசாரி தடுக்க முயன்றார்.
ஆனால் அந்த வாலிபர் பூசாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து பூசாரி சத்தம் போட்டதால் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தது. சிலையை உடைத்துக் கொண்டிருந்த ரங்கநாதனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை சிங்காநல்லூர் காவல்துறை சிறையில் அடைத்தனர்.