கோவையில் கஞ்சா பதுக்கிய மூன்று பேரை போலிசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 25-கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் கஞ்சா பதுக்கிய மூன்று பேரை போலிசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 25-கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.
கோவை ஈச்சனாரி அருகில் உள்ள தனியார் கல்லூரி அருகில் உள்ள குடோனில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலிசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, கோவை போத்தனூர் போலிசார் பொறிவைத்துப் பிடித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கேரளா மாநிலம், எர்ணாகுளம், முளவங்காடு பகுதியை சேர்ந்த அந்தோணி வயது 60, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் வயது-55, மற்றும் மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த மாயன் வயது-55 என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் ஆந்திராவிலிருந்து கடத்திவந்ததாக போலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் மூன்றுபேரிடம் இருந்து 25-கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர் விசாரணைக்கு பிறகு தான் இவர்கள் எங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தார்கள், இவர்கள் சில்லறை விற்பனையில் ஈடுபடுபவர்களா?, அல்லது ஏஜென்ஸியாக செயல்படுகிறார்களா?, கோவையில் யாருக்கெல்லாம் வினியோகம் செய்துள்ளார்கள் என்பது போலிசாரின் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.
கோவை ஈச்சனாரி அருகில் உள்ள தனியார் கல்லூரி அருகில் உள்ள குடோனில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலிசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, கோவை போத்தனூர் போலிசார் பொறிவைத்துப் பிடித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கேரளா மாநிலம், எர்ணாகுளம், முளவங்காடு பகுதியை சேர்ந்த அந்தோணி வயது 60, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் வயது-55, மற்றும் மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த மாயன் வயது-55 என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் ஆந்திராவிலிருந்து கடத்திவந்ததாக போலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் மூன்றுபேரிடம் இருந்து 25-கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர் விசாரணைக்கு பிறகு தான் இவர்கள் எங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தார்கள், இவர்கள் சில்லறை விற்பனையில் ஈடுபடுபவர்களா?, அல்லது ஏஜென்ஸியாக செயல்படுகிறார்களா?, கோவையில் யாருக்கெல்லாம் வினியோகம் செய்துள்ளார்கள் என்பது போலிசாரின் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.