கனமழையால் கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட் பாலங்கள், அனைப்பாலம் உள்ளிட்ட பகுதிகள் குளம் போல் காட்சியளித்தது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் வானம் மேக முட்டத்துடன் காணப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மதியம் சுமார் 1 மணி நேரம் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

திருப்பூர் மாநகர பகுதிகளான அவினாசி சாலை, பல்லடம் சாலை, செவந்தாம் பாளையம், ராக்கியாபாளையம், வெள்ளியங்காடு நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
கனமழை காரணமாக கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட் பாலங்கள், அனைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் வானம் மேக முட்டத்துடன் காணப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மதியம் சுமார் 1 மணி நேரம் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
திருப்பூர் மாநகர பகுதிகளான அவினாசி சாலை, பல்லடம் சாலை, செவந்தாம் பாளையம், ராக்கியாபாளையம், வெள்ளியங்காடு நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
கனமழை காரணமாக கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட் பாலங்கள், அனைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.