டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுமிகள் உட்பட 3 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை


கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் மற்றும் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டெங்குவால் பாதிக்கப்பட்ட மூவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும், இதுகுறித்து தெரிவித்த இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல், தற்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சை காரணமாக மூவருக்கும் உடல்நிலை தேறிவருவதாகவும், டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள், இரத்ததட்டுகள் போன்றவை போதுமான அளவில் உள்ளதாகவும் கூறினார். 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய அவர், பொதுமக்கள் தங்களுடைய சுற்றுப்புறத்தை நீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...