வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..!

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதியை இன்று கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு பருவ மழை தீவிரமாக உள்ள நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று மிக கன மழை பெய்யும். கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். சென்னையின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.

இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் மே.மாத்துாரில் 7 செ.மீ., மழை பெய்து உள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதியை இன்று கடக்கும்.

அரபிக் கடலில் மத்திய கிழக்கு, தென் கிழக்கு மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கேரளா- - லட்சத்தீவு கடலோர பகுதியை இன்று கடக்கும். இதனால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...