ஆண்டிபாளையத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு.!!

ஆண்டிபாளையத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கோவை: ஆண்டிபாளையத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிபாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.



பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.



இதேபோல் ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார்.

இதையடுத்து ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையிலும் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார்.



இந்த நிகழ்வுகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பண்ண சாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பாப்பு(எ) திருஞானசம்பந்தம், அக்னிஸ் முகுந்தன், வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...