ஆண்டிபாளையத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கோவை: ஆண்டிபாளையத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிபாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

இதேபோல் ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார்.
இதையடுத்து ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையிலும் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார்.

இந்த நிகழ்வுகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பண்ண சாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பாப்பு(எ) திருஞானசம்பந்தம், அக்னிஸ் முகுந்தன், வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிபாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இதேபோல் ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார்.
இதையடுத்து ஆண்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையிலும் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார்.
இந்த நிகழ்வுகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பண்ண சாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பாப்பு(எ) திருஞானசம்பந்தம், அக்னிஸ் முகுந்தன், வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.