உலக கை கழுவுதல் தினம்: கோவை புல்லுக்காடு பகுதியில் கை கழுவுதலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்..!

குழந்தைகளுக்கு 20 விநாடிகள் கை கழுவுதல் பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், நகம் வளர்த்தல் கூடாது, கை கழுவாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தனர்.



கோவை: கோவை புல்லுக்காடு பகுதியில் உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு கை கழுவுதல் மற்றும் அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

உலக சுகாதரா அமைப்பின் அறிவிப்பின்படி 2008ம் ஆண்டிலிருந்து கை கழுவும் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தற்போது, உலகை அச்சுறுத்திவரும் கொரோனா போன்ற நோய்த் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் கைகளை முறையாக அடிக்கடி கழுவ வேண்டும் என்பதையே முதன்மையாக கூறி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, இன்று புல்லுக்காடு பகுதியில் பொதுமக்களுக்கு முறையாக ஜெய்கா அமைப்பின் சார்பில் கை கழுவுதல் மற்றும் அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு 20 விநாடிகள் கை கழுவுதல் பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், நகம் வளர்த்தல் கூடாது, கை கழுவாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எளிதில் புரியும் வகையில் நாடகங்கள், பாடல்கள் வாயிலாக ஏற்படுத்தினர். அதே போல் நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக நகம் வெட்டிகள் வழங்கப்பட்டது.





இதில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கிளிசரின் சோப்பு வழங்கி கை கழுவுதலின் சரியான முறை குறித்து எடுத்து கூறினார். கொரோனா போன்ற வைரஸ் கிருமி படிந்துள்ள பொருட்களை தொடும்போது, கைகள் மூலமாகவும் பரவுகின்றன. இதை தவிர்க்க கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் கூறி வருவதாக அவ்வமைப்பை சார்ந்த கல்பனா தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...