இதில் காயமடைந்த கந்தசாமி, சிவகாமி, பட்டீஸ்வரன், வெள்ளீஸ்வரி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் குடிநீர் பைப் போடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் மாகாளி அம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் கந்தசாமி, இவரது வீட்டு அருகே அரசம்பாளையம் ஊராட்சி மன்றம் சார்பில் நேற்று முன்தினம் குடிநீர் பைப் போடுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
அப்போது, அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவர் கந்தசாமி மற்றும் அவரது மகன் சிவக்குமார் ஆகியோருடன் குடிநீர் பைப் போடுவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் வடிவேலு உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து கந்தசாமியை தகாத வார்த்தை கூறி தாக்கியுள்ளனர். அப்போது தடுக்கச் சென்றவர்களையும் வடிவேலு உள்ளிட்ட 5 பேர் தாக்கி உள்ளனர்.
இதில் காயமடைந்த கந்தசாமி, சிவகாமி, பட்டீஸ்வரன், வெள்ளீஸ்வரி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காயமடைந்த கந்தசாமியின் மகன் சிவகுமார் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கந்தசாமி உள்ளிட்ட 4 பேரை தாக்கிய வடிவேல் மற்றும் அவரது மைத்துனர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் வடிவேல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் காவலில் உள்ளார். மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் மாகாளி அம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் கந்தசாமி, இவரது வீட்டு அருகே அரசம்பாளையம் ஊராட்சி மன்றம் சார்பில் நேற்று முன்தினம் குடிநீர் பைப் போடுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
அப்போது, அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவர் கந்தசாமி மற்றும் அவரது மகன் சிவக்குமார் ஆகியோருடன் குடிநீர் பைப் போடுவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் வடிவேலு உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து கந்தசாமியை தகாத வார்த்தை கூறி தாக்கியுள்ளனர். அப்போது தடுக்கச் சென்றவர்களையும் வடிவேலு உள்ளிட்ட 5 பேர் தாக்கி உள்ளனர்.
இதில் காயமடைந்த கந்தசாமி, சிவகாமி, பட்டீஸ்வரன், வெள்ளீஸ்வரி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காயமடைந்த கந்தசாமியின் மகன் சிவகுமார் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கந்தசாமி உள்ளிட்ட 4 பேரை தாக்கிய வடிவேல் மற்றும் அவரது மைத்துனர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் வடிவேல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் காவலில் உள்ளார். மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.