கோவையில் போலி செக் கொடுத்து பண மோசடி செய்ய முயன்றவர்கள் கைது.!!!

போலி செக் மூலம் 34-லட்சம் மோசடி செய்ய முயன்ற 3-பேர் கைது செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் போலி செக் மூலம் 34-லட்சம் மோசடி செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை திருச்சி ரோடு சேரன் பிளாசா வளாகத்தில் ஐசிஐசிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை இரண்டு பேர் வந்து டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட அஸ்லீப் வெல்லனஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரிலான ஒரு கோடியே 34-லட்சம் ரூபாய்க்கான செக்கை கொடுத்து வங்கியில் செலுத்த முயன்றனர்.

அப்போது, வங்கிக் கிளை மேனேஜர் பிரசாத் ராமகிருஷ்ணனுக்கு செக் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட அப்போது தங்கள் யாருக்கும் அவ்வாறு கொடுக்கவில்லை என்பதை அவர்கள் தெரிவித்தனர்.

இதை அடுத்து, வந்திருந்த நபர்கள் போலியாக செக்கை தயாரித்து வந்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் பிரசாந்த் ராமகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வங்கியில் போலி செக்கை கொடுத்து மாற்ற முயன்றதாக பீளமேடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் செந்தில்குமார் (45) ராமநாதபுரம் காடன் கிரஸ்ட் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் ஸ்ரீ ஹரிஹர குமார் (45), மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சுதீஷ் (27 )ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள பார்த்திபன் மற்றும் ராஜ் என்கிற ராஜ் பரத் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...