கோவையில் கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது.!!!

மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினத்தின் உத்தரவின் பெயரில் காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினத்தின் உத்தரவின் பெயரில் காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது செல்வபுரம் என்.எஸ்.கே வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் யுவா என்கிற யுவராஜ் (26) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100-கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல ஆர்எஸ் புரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பசுவண்ணன் கோவில் வீதி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், கே.கே.புதூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மனைவி ஷகிலா (38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 200- கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...