கோவையில் கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது.!!!

மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினத்தின் உத்தரவின் பெயரில் காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினத்தின் உத்தரவின் பெயரில் காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது செல்வபுரம் என்.எஸ்.கே வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் யுவா என்கிற யுவராஜ் (26) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100-கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல ஆர்எஸ் புரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பசுவண்ணன் கோவில் வீதி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், கே.கே.புதூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மனைவி ஷகிலா (38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 200- கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...