தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், வேலூர் மண்டல அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த பாரதிதாசன் கோவை மாநகராட்சி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலராகப் பாரதிதாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகராட்சியில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்த துரைசாமி வேலூர் மண்டல மக்கள் தொடர்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்குப் பதிலாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், வேலூர் மண்டல அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த பாரதிதாசன் கோவை மாநகராட்சி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.