மேலும் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை மறுதினம் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை, நீலகிரி உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, பல மாவட்டங்களில் வரும் 17ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்.
அதேபோல நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் நாளை மறுதினம் மிக கன மழை பெய்யும். கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். வரும் 17ம் தேதி, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
மேலும், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரா - ஒடிசா நோக்கிச் செல்லும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, பல மாவட்டங்களில் வரும் 17ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்.
அதேபோல நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் நாளை மறுதினம் மிக கன மழை பெய்யும். கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். வரும் 17ம் தேதி, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
மேலும், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரா - ஒடிசா நோக்கிச் செல்லும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.