தென்னை மரங்கள் நீரின்றி காய்ந்து போவதால் அதைத் தனது மற்றொரு தோட்டத்திற்கு மாற்ற முடிவு செய்த நிலையில், காய்ந்த தென்னை மரங்களைப் பிடுங்கி, மீண்டும் நட்ட விவசாயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்களைப் பிடுங்கி, மீண்டும் நட்ட விவசாயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் ஒணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் நீரின்றி காய்ந்து போவதால் அதைத் தனது மற்றொரு தோட்டத்திற்கு மாற்ற முடிவு செய்தார்.
அதன்படி கோவை சுல்தான் பேட்டை சேர்ந்த கனகராஜ் என்பவர் மூலம் அவரது தோட்டத்திலிருந்த 90-தென்னை மரங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியோடு வேரோடு எடுத்து அருகே உள்ள மற்றொரு தோட்டத்திற்கு எடுத்துச் சென்று மறு நடவு செய்தார்.
ஒவ்வொரு தென்னை மரங்களையும் நடவு செய்யும் போது அதனுடன் நவ தானியங்களும் இடப்பட்டு பொதுவாக நீரின்றி தென்னை மரங்கள் வீணாகக் கரி வராமல் இருப்பதைத் தவிர்க்க இம்மாதிரியான வழிமுறைகள் மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு இது மாதிரியான வசதிகள் இல்லை, நாங்கள் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் இதேபோல், தென்னை மரங்களை எடுத்து மற்ற தோட்டங்களில் மறு நடவு செய்திருக்கிறோம். இவ்வாறு நடவு செய்யும் போது மரங்கள் மீண்டும் துளிர்க்க 6- மாதம் வரை ஆகும்.
ஆனால், சமீபத்தில் நாங்கள் மரம் நடவு செய்த மரங்கள் வெறும் ஒரே மாதத்தில் பூக்கத் தொடங்கி இருக்கிறது இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் ஒணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் நீரின்றி காய்ந்து போவதால் அதைத் தனது மற்றொரு தோட்டத்திற்கு மாற்ற முடிவு செய்தார்.
அதன்படி கோவை சுல்தான் பேட்டை சேர்ந்த கனகராஜ் என்பவர் மூலம் அவரது தோட்டத்திலிருந்த 90-தென்னை மரங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியோடு வேரோடு எடுத்து அருகே உள்ள மற்றொரு தோட்டத்திற்கு எடுத்துச் சென்று மறு நடவு செய்தார்.
ஒவ்வொரு தென்னை மரங்களையும் நடவு செய்யும் போது அதனுடன் நவ தானியங்களும் இடப்பட்டு பொதுவாக நீரின்றி தென்னை மரங்கள் வீணாகக் கரி வராமல் இருப்பதைத் தவிர்க்க இம்மாதிரியான வழிமுறைகள் மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு இது மாதிரியான வசதிகள் இல்லை, நாங்கள் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் இதேபோல், தென்னை மரங்களை எடுத்து மற்ற தோட்டங்களில் மறு நடவு செய்திருக்கிறோம். இவ்வாறு நடவு செய்யும் போது மரங்கள் மீண்டும் துளிர்க்க 6- மாதம் வரை ஆகும்.
ஆனால், சமீபத்தில் நாங்கள் மரம் நடவு செய்த மரங்கள் வெறும் ஒரே மாதத்தில் பூக்கத் தொடங்கி இருக்கிறது இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.