கோவையில் கடந்த 5 மாதங்களில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 16,754 பேர் பயனடைந்துள்ளனர்.
கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவையில் கடந்த 5 மாதங்களில் 16, 754 பேர் பயனடைந்துள்ளனர் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் இன்று வரை இருதய நோய், தோல்நோய், நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய், எழும்பியல், குழந்தை மருத்துவம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பு, உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 16 ஆயிரத்து 754 பயனாளிகளுக்கு ரூபாய் 48 .07 கோடி மதிப்பில் மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
பழைய காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள், தங்களது காப்பீடு அட்டை செயல்பாட்டில் உள்ளதா? என இ-சேவை மையம் மூலமாக தெரிந்து கொள்ளலாம், இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் இன்று வரை இருதய நோய், தோல்நோய், நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய், எழும்பியல், குழந்தை மருத்துவம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பு, உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 16 ஆயிரத்து 754 பயனாளிகளுக்கு ரூபாய் 48 .07 கோடி மதிப்பில் மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
பழைய காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள், தங்களது காப்பீடு அட்டை செயல்பாட்டில் உள்ளதா? என இ-சேவை மையம் மூலமாக தெரிந்து கொள்ளலாம், இவ்வாறு அவர் கூறினார்.