கோயில்களை திறக்க வலியுறுத்தி சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!!

கோவை தெற்கு தாலுகா அலுவலக வாசலில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக இந்து கோயில்களைத் திறக்க வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு தாலுகா அலுவலக வாசலில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக இந்து கோயில்களைத் திறக்க வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநில துணைத்தலைவர் புல்லட் ராஜ சேகர் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் ஸ்ரீ அன்புமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் பிரேம் குமார் முன்னிலை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தற்போது தமிழகத்தில் 144-தடை உத்தரவு அமலிலிருந்த போதிலும் விதிவிலக்காக அனைத்து அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு பேருந்துகளும் உணவகங்களும் இயங்கித் தொடங்கிவிட்டன. அத்தியாவசிய மற்ற நிறையக் கடைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் மக்களின் அடிப்படைத் தேவையான ஆன்மீக பூமியான தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தெய்வ சக்தி கொண்ட கோவில்கள் வாரத்தில் முக்கிய நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் திறக்கப்படாமல் உள்ளது.

இது மிகுந்த மன வேதனை அளிக்கும் செயலாக உள்ளன. கொரோவை கட்டுப்படுத்துவதில் தொழில்நுட்பத்தை விடவும் தெய்வ சக்தி மிகவும் முக்கிய பங்காற்றும் என்பதில் அய்யமில்லை.

எனவே விரைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் அனைத்து நாட்களிலும் திறந்து கொரோனா நீங்கச் சிறப்பு வழிபாடு நடத்த அனைத்து கோயில்களையும் திறந்திடத் தமிழக அரசை வலியுறுத்தி சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

எனத் தமிழக அரசுக்கு எதிராகக் கோவிலைத் திறக்க படி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...