ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் தீபாவளி திருடர்கள் இரண்டரை பவுன் செயின் பறிப்பு.!!

செயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து, போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் திருடும் கும்பலைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை பறித்த தீபாவளி திருடர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு அருகே உள்ள ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் மருதாசலம், இவரது மனைவி ஆண்டாள் வயது 70, இவர் நேற்று மாலை தெலுங்கு பாளையம் புத்தூருக்குச் செல்வதற்காக ஹப்ஸ் கல்லூரி பஸ் நிறுத்தத்திலிருந்து பேருந்து ஏறினார்.

பேருந்தில் பயணம் செய்த போது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆண்டாள் கழுத்தில் அணிந்திருந்த 2-பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.

பேருந்து உக்கடம் வந்தவுடன் பேருந்தை விட்டு இறங்கி ஆண்டாள் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து, போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் திருடும் கும்பலைத் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...