தசரா விழாவை முன்னிட்டு, கோவையில் காளி, சிவன், பார்வதி, பிரம்மன், உள்ளிட்ட வேடமணிந்து விரதம் துவக்கி கோவையில் தசரா குழுவினரின் திருவிழாவை துவக்கினர்.
கோவை: தசரா விழாவை முன்னிட்டு, கோவையில் காளி, சிவன், பார்வதி, பிரம்மன், உள்ளிட்ட வேடமணிந்து விரதம் துவக்கி கோவையில் தசரா குழுவினரின் திருவிழாவை துவக்கினர்.
திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா கால விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த ஆண்டு தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை நல்லாம்பாளையம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில், அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழாவின் ஒரு பகுதியாக, தொடர்ந்து 22-வது ஆண்டாக, தசரா விழாவை முன்னிட்டு, விரதமிருந்த பக்தர்கள் முத்தாரம்மனுக்கு காணிக்கை செலுத்த காளி, சிவன், பார்வதி, பிரம்மன், விஷ்ணு, நாராயணர், ராமர், லட்சுமணர், அனுமார் உள்ளிட்ட வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்த துவங்கினர்.
இதில், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடி அசத்தினர். இதில் நல்லாம்பாளையம் முத்தாரம்மன் கோவில் நிர்வாகிகள் லிங்கதுரை, பால்சாமி, ராஜ்குமார், மணிவண்ணன், சிவசாமி, செல்லப்பா, ஆனந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.