கோவை நல்லாம்பாளையம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.!!

தசரா விழாவை முன்னிட்டு, கோவையில் காளி, சிவன், பார்வதி, பிரம்மன், உள்ளிட்ட வேடமணிந்து விரதம் துவக்கி கோவையில் தசரா குழுவினரின் திருவிழாவை துவக்கினர்.



கோவை: தசரா விழாவை முன்னிட்டு, கோவையில் காளி, சிவன், பார்வதி, பிரம்மன், உள்ளிட்ட வேடமணிந்து விரதம் துவக்கி கோவையில் தசரா குழுவினரின் திருவிழாவை துவக்கினர்.

திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா கால விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த ஆண்டு தசரா திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை நல்லாம்பாளையம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில், அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.



திருவிழாவின் ஒரு பகுதியாக, தொடர்ந்து 22-வது ஆண்டாக, தசரா விழாவை முன்னிட்டு, விரதமிருந்த பக்தர்கள் முத்தாரம்மனுக்கு காணிக்கை செலுத்த காளி, சிவன், பார்வதி, பிரம்மன், விஷ்ணு, நாராயணர், ராமர், லட்சுமணர், அனுமார் உள்ளிட்ட வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்த துவங்கினர்.



இதில், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடி அசத்தினர். இதில் நல்லாம்பாளையம் முத்தாரம்மன் கோவில் நிர்வாகிகள் லிங்கதுரை, பால்சாமி, ராஜ்குமார், மணிவண்ணன், சிவசாமி, செல்லப்பா, ஆனந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...