அழகு மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கு என கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய மருத்துவமனை மையம் துவக்கம்

அழகு மற்றும் சுகாதாரமான ஆரோக்கியத்திற்கான சிகிச்சைக்கு என கோவை ஆர்.எஸ்.புரத்தில் மருத்துவமனை மற்றும் சலூன் இன்று திறந்து வைக்கப்பட்டது. இது சலூன் மையமாகவும், உடலின் மேற்பரப்பில் அழகு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது.



இந்த மையத்தினை விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "ஒரே இடத்தில் மேம்படுத்தப்பட்ட சலூன் சேவைகளும், ஒரு முழுவசதிகளுடன் அழகு மையமும் செயல்படுவது இதுவே முதல் முறை. இச்சேவை கோவை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இதன் மூலம் கோவை மக்கள் தங்கள் அழகு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தி பயனடைய வேண்டும்'' என்றார்.

பார்க் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா கூறுகையில், "எல்லோரும் ஒருமுறையாவது இந்த மருத்துவமனை சேவைகளை பெற வேண்டும். இந்த அழகு மருத்துவமனை அழகு மற்றும் சுகாதார துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்'' என்றார்.

மிர்ஷஸ் யெர்த் 2016 விருது பெற்ற ஜெயா மகேஷ், "இது ஒரு அழகு மற்றும் சுகாதாரத்திற்கு என துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் தங்களது அழகை மெருகூட்டிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்'' என்றார்.

ஜுவல் ஒன் அன்டு எம்ரால்டு நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், இந்த அழகு மருத்துவமனை அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.

எம்எல்ஆர் நிர்வாக இயக்குநர் கேசிஆர் பாலாஜி, ஒரு இடத்தில் அழகு தொடர்பாக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மையம் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...