பருவமழையின் போது மின்சார விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்..!

பருவமழை காலத்தில் அதிக அளவு மின் விபத்துகள் ஏற்படும். இடி மின்னலின் போது உடனடியாக காங்கிரீட் கூரைகளால் ஆன பெரிய கட்டிடம், வீடு அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், வேன், போன்றவற்றில் தஞ்சமடையலாம்.


கோவை: பருவமழையின் போது மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

வேவெப்பச்சலனம் காரணமாக தற்போது கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், பருவமழை காலத்தில் அதிக அளவு மின் விபத்துகள் ஏற்படும். இந்த மின் விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி என்று பொதுமக்களுக்கு விளக்கமளித்து கோவை தெற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின் பாபு கூறியுள்ளதாவது:-

தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் இடி அல்லது மின்னலின் போது மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது பாதுகாப்பானது.

இடி மின்னலின் போது உடனடியாக காங்கிரீட் கூரைகளால் ஆன பெரிய கட்டிடம், வீடு அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன், போன்றவற்றில் தஞ்சமடையலாம்.

குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ நிற்கக்கூடாது. இடி இடிக்கும் போது டிவியில் இணைக்கப்பட்டுள்ள கேபிளின் தொடர்பை துண்டிக்க வேண்டும்.

அத்துடன் இடி மின்னலின் போது வீட்டின் ஜன்னல் கதவு போன்றவற்றின் அருகில் நிற்க கூடாது. சாய்ந்த மின் கம்பங்களுக்கு அருகில் நிற்கக் கூடாது.

மின்மாற்றியில் பீஸ் போய் இருந்தால் அதை சரி செய்ய மின் வாரிய ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்மான பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம். வீட்டில் உள்ள மின்சாரத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனடியாக காலணி அணிந்து மெயின் சுவிட்சை ஆப் செய்துவிட்டு மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். இடி அல்லது மின்னலின் போது தஞ்சமடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக நிற்கவேண்டும்.

இடி மின்னலின் போது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடாமலும், மிதிக்காமல் இருக்கவும். இது குறித்து உடனே மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், மழை பெய்யும்போது கேபிள் டிவி ஒயர்களை தொடக்கூடாது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...