சட்டம் தெரியாதவர்கள் இருக்கக்கூடாது, சட்டம் ஏழை எளியவர்களையும் சென்றடைய வேண்டும் என்று இந்த முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் குரங்குடி எஸ்டேட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் வழக்கறிஞர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும், வால்பாறை நீதிமன்ற நீதிபதி கவிதா வழிகாட்டுதலின் படியும், வால்பாறை பகுதியில் 45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, குரங்குடி எஸ்டேட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் வழக்கறிஞர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. சட்ட தன்னார்வ பணியாளர் சுரேஸ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் வழக்கறிஞர் விஸ்வநாதன் பேசுகையில், சட்டம் தெரியாதவர்கள் இருக்கக்கூடாது, சட்டம் ஏழை எளியவர்களையும் சென்றடைய வேண்டும், இளவர் திருமண தடை சட்டம், பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு கருதி தனிமையில் செல்வதை தவிர்க்க வேண்டும், தற்போது வால்பாறை பகுதியில் போக்சோ சட்டத்தில் அதிக வழக்குகள் பதியப்பட்டு வருகிறது வருத்தமளிக்கிறது, பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகிறது.
எனவே, பெண் குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்ப வேண்டும், தெரியாத ஆண்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும், வால்பாறை நீதிமன்ற நீதிபதி கவிதா வழிகாட்டுதலின் படியும், வால்பாறை பகுதியில் 45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, குரங்குடி எஸ்டேட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் வழக்கறிஞர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. சட்ட தன்னார்வ பணியாளர் சுரேஸ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் வழக்கறிஞர் விஸ்வநாதன் பேசுகையில், சட்டம் தெரியாதவர்கள் இருக்கக்கூடாது, சட்டம் ஏழை எளியவர்களையும் சென்றடைய வேண்டும், இளவர் திருமண தடை சட்டம், பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு கருதி தனிமையில் செல்வதை தவிர்க்க வேண்டும், தற்போது வால்பாறை பகுதியில் போக்சோ சட்டத்தில் அதிக வழக்குகள் பதியப்பட்டு வருகிறது வருத்தமளிக்கிறது, பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகிறது.
எனவே, பெண் குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்ப வேண்டும், தெரியாத ஆண்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார்.