கேமரா வாங்கி ஏமாற்றிய விரக்தி, கோத்தகிரியில் ரியல் எஸ்டேட் அதிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 4-பேர் கைது.!!

கோத்தகிரியில், கேமரா வாங்கி ஏமாற்றிய விரக்தியில், ரியல் எஸ்டேட் அதிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 4-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விற்ற ரூபாய் 6-லட்சம் மதிப்புள்ள கேமராவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோத்தகிரியில், கேமரா வாங்கி ஏமாற்றிய விரக்தியில், ரியல் எஸ்டேட் அதிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 4-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது 39, ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் அடைந்தால் தனது ஸ்டூடியோவில் இருந்த ரூபாய் 6-லட்சம் மதிப்புள்ள கேமராவை வாடகைக்கு விட முடிவு செய்தார்.

இதையடுத்து வெங்கடேஷ் கேமராவை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனை பார்த்த சேலத்தைச் சேர்ந்த அஜித் வயது 25, மற்றும் அவரது நண்பர் தீனா வயது 25 அவரை தொடர்பு கொண்டு கேமராவை வாடகைக்கு வாங்கி சென்றனர்.

பின்னர் வெகு நாட்களாகியும் அவர்கள் வாடகையும் காமிராவையும் தராமல் இழுத்தடித்து வந்தனர். இதை குறித்து வெங்கடேசன் அவர்களைத் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வெங்கடேஷ் ரியல் எஸ்டேட் தொழில் இல்லாமலும், கேமரா இல்லாமல் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விருத்தியடைந்து மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விசாரணையில், கேமராவை வாடகைக்கு வாங்கி சென்றவர்கள் திருப்பித் தராததால் தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான ரயில்வே போலீசார் காமிராவை வாங்கி சென்ற அஜித் மற்றும் தீனாவை தேடி வந்தனர்.

அப்போது அவர்கள் சேலத்திலிருந்து இருந்தது தெரிந்து போலீசார் அங்கு சென்று அஜித் மற்றும் தீனவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குணசேகரன் வயது 29, விமல் ஆகியோரின் உதவியுடன் கேமராவை விற்று விட்டதாக தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அஜித் தீனா குணசேகரன் விமல் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் அவர்கள் விற்ற ரூபாய் 6-லட்சம் மதிப்புள்ள கேமராவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...