கேமரா வாங்கி ஏமாற்றிய விரக்தி, கோத்தகிரியில் ரியல் எஸ்டேட் அதிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 4-பேர் கைது.!!

கோத்தகிரியில், கேமரா வாங்கி ஏமாற்றிய விரக்தியில், ரியல் எஸ்டேட் அதிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 4-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விற்ற ரூபாய் 6-லட்சம் மதிப்புள்ள கேமராவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோத்தகிரியில், கேமரா வாங்கி ஏமாற்றிய விரக்தியில், ரியல் எஸ்டேட் அதிபரை தற்கொலைக்கு தூண்டியதாக 4-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது 39, ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் அடைந்தால் தனது ஸ்டூடியோவில் இருந்த ரூபாய் 6-லட்சம் மதிப்புள்ள கேமராவை வாடகைக்கு விட முடிவு செய்தார்.

இதையடுத்து வெங்கடேஷ் கேமராவை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனை பார்த்த சேலத்தைச் சேர்ந்த அஜித் வயது 25, மற்றும் அவரது நண்பர் தீனா வயது 25 அவரை தொடர்பு கொண்டு கேமராவை வாடகைக்கு வாங்கி சென்றனர்.

பின்னர் வெகு நாட்களாகியும் அவர்கள் வாடகையும் காமிராவையும் தராமல் இழுத்தடித்து வந்தனர். இதை குறித்து வெங்கடேசன் அவர்களைத் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வெங்கடேஷ் ரியல் எஸ்டேட் தொழில் இல்லாமலும், கேமரா இல்லாமல் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விருத்தியடைந்து மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விசாரணையில், கேமராவை வாடகைக்கு வாங்கி சென்றவர்கள் திருப்பித் தராததால் தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான ரயில்வே போலீசார் காமிராவை வாங்கி சென்ற அஜித் மற்றும் தீனாவை தேடி வந்தனர்.

அப்போது அவர்கள் சேலத்திலிருந்து இருந்தது தெரிந்து போலீசார் அங்கு சென்று அஜித் மற்றும் தீனவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குணசேகரன் வயது 29, விமல் ஆகியோரின் உதவியுடன் கேமராவை விற்று விட்டதாக தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அஜித் தீனா குணசேகரன் விமல் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் அவர்கள் விற்ற ரூபாய் 6-லட்சம் மதிப்புள்ள கேமராவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...