வால்பாறை அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.!!

வால்பாறையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. கருமலை எஸ்டேட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.


வால்பாறை: வால்பாறையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. கருமலை எஸ்டேட் பாலாஜி கோவில் அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இதன் காரணமாக வால்பாறை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

வெள்ளமலை சுரங்க நீர்வீழ்ச்சி, நடுமலை ஆறு, ஆகிய பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், வால்பாறை அடுத்துள்ள கருமலை பகுதியில், சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.



இதனால் சுமார் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கருமலை வெள்ளமலை ஆகிய பகுதிகளிலிருந்து வால்பாறைக்குப் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...