இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் அதிகாரியின் வசம் கோவை மாவட்ட காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் அவர்கள் சாமியார் தோட்டத்திற்கு விரைந்து சென்று சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைத்தார்.
இதேபோன்று கடந்த 07.10.2021-ம் தேதி அதே பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் அதிகாரிகளின் வசம் ஒப்படைத்தனர்.
இவ்வழக்கில், தொடர்புடைய இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் அவர்கள் சாமியார் தோட்டத்திற்கு விரைந்து சென்று சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைத்தார்.
இதேபோன்று கடந்த 07.10.2021-ம் தேதி அதே பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் அதிகாரிகளின் வசம் ஒப்படைத்தனர்.
இவ்வழக்கில், தொடர்புடைய இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.