கோவை மாதம்பட்டி ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமோக வெற்றி..!!

திமுக வேட்பாளர் சிவபிரகாஷ் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா 190 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


கோவை: கோவை மாதம்பட்டி ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சியில், 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி மாதம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நடந்தது. இதில் அ.தி.மு.க சார்பாக கார்த்திக் ராஜா, தி.மு.க.சார்பாக சிவப்பிரகாஷ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் உதய குமார் ஆகியோர் என 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மொத்தம் 447 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில்,174 ஆண்கள், 187 பெண்கள் பேரும் என மொத்தம் 361 பேர் வாக்களித்தனர். 81 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில் போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டுப்பெட்டி, தொண்டாமுத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பலத்த பாதுகாப்புடன் காலை, 8:00 மணிக்கு, வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்றது.



இதில் மாதம்பட்டி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவபிரகாஷ் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா 190 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.





Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...