கோவை மாவட்டத்தில் 71 சதவீத பொதுமக்களுக்கு கொரோனா எதிா்ப்பாற்றால் அதிகரிப்பு - சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்..!

5 மாவட்டங்களில் ரத்த மாதிரிகள் சேகரித்து நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் ஆய்வு கடந்த செப்டம்பரில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 71 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் பொதுமக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் பரவியுள்ள விதம் குறித்து கண்டறிய பொது சுகாதாரத் துறை சாா்பில் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நபர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

முதல் கட்ட ஆய்வு 2020ம் ஆண்டு நவம்பரிலும், இரண்டாம் கட்ட ஆய்வு 2021ம் ஆண்டு ஏப்ரலிலும், மூன்றாம் கட்ட ஆய்வு கடந்த ஆகஸ்ட்டிலும் நடைபெற்றது.

இதில் மாநிலத்திலேயே மிகக்குறைவாக ஈரோட்டில் 37 சதவீதம், கோவையில் 43 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், அதிக அளவில் நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் காணப்பட்ட முதல் 5 மாவட்டங்கள், குறைவாக நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் காணப்பட்ட கடைசி 5 மாவட்டங்களில் மீண்டும் ரத்த மாதிரிகள் சேகரித்து நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் ஆய்வு கடந்த செப்டம்பரில் நடைபெற்றது.

இதில், கோவை மாவட்டத்தில் 71 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...