ஊரடங்கு காரணமாகக் கடந்த ஓராண்டாகச் சரியான வேலை இல்லாமல், கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் மனம் உடைந்த சி.என்.சி ஆப்பரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் மனம் உடைந்த சி என் சி ஆப்பரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சுந்தராபுரம் அடுத்த அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ஆனந்தன்(31). இவர் சிஎன்சி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு காரணமாகக் கடந்த ஓராண்டாகச் சரியான வேலை இல்லாமல் தவித்து வந்தார்.
இதனால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத சூழ்நிலையிலிருந்து வந்தார். இந்நிலையில் மனைவி ஶ்ரீதேவி மற்றும் குழந்தைகளைத் தனது பாட்டி வீட்டில் கொண்டு சென்று விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
மனம் உடைந்த நிலையிலிருந்த ஆனந்த் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரது சகோதரரின் மகன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவைத் தட்டியபோது திறக்காததால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார்.
அப்போது ஆனந்த் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் இதுகுறித்து போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் அடுத்த அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ஆனந்தன்(31). இவர் சிஎன்சி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு காரணமாகக் கடந்த ஓராண்டாகச் சரியான வேலை இல்லாமல் தவித்து வந்தார்.
இதனால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத சூழ்நிலையிலிருந்து வந்தார். இந்நிலையில் மனைவி ஶ்ரீதேவி மற்றும் குழந்தைகளைத் தனது பாட்டி வீட்டில் கொண்டு சென்று விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
மனம் உடைந்த நிலையிலிருந்த ஆனந்த் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரது சகோதரரின் மகன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவைத் தட்டியபோது திறக்காததால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார்.
அப்போது ஆனந்த் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் இதுகுறித்து போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.