வேலையில்லா விரக்தி: சி என் சி ஆப்பரேட்டர் தற்கொலை.!!

ஊரடங்கு காரணமாகக் கடந்த ஓராண்டாகச் சரியான வேலை இல்லாமல், கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் மனம் உடைந்த சி.என்.சி ஆப்பரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலையில் மனம் உடைந்த சி என் சி ஆப்பரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சுந்தராபுரம் அடுத்த அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ஆனந்தன்(31). இவர் சிஎன்சி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு காரணமாகக் கடந்த ஓராண்டாகச் சரியான வேலை இல்லாமல் தவித்து வந்தார்.

இதனால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத சூழ்நிலையிலிருந்து வந்தார். இந்நிலையில் மனைவி ஶ்ரீதேவி மற்றும் குழந்தைகளைத் தனது பாட்டி வீட்டில் கொண்டு சென்று விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

மனம் உடைந்த நிலையிலிருந்த ஆனந்த் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரது சகோதரரின் மகன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவைத் தட்டியபோது திறக்காததால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார்.

அப்போது ஆனந்த் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் இதுகுறித்து போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...