கோவை சத்தி ரோட்டில் மால் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இடையே டைமிங் பிரச்சனையில் மோதல் ஏற்பட்டது.
கோவை: கோவையில் டைமிங் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் தனியார் பேருந்து ஓட்டுநர் நடத்துநர் 4-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை சத்தி ரோட்டில் மால் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இடையே டைமிங் பிரச்சனையில் மோதல் ஏற்பட்டது.
அவர்கள் சாலையில் பேருந்தை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மற்ற வாகன ஓட்டிகள் சரவணம்பட்டி காவல்துறை நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் காவல்துறை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஆன ஆலாந்துறை சீனிவாச புரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் 30, இடையர் பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் 27, மற்றொரு தரப்பைச் சேர்ந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முருகன் 56, சுரேஷ்குமார் 32, ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை சத்தி ரோட்டில் மால் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இடையே டைமிங் பிரச்சனையில் மோதல் ஏற்பட்டது.
அவர்கள் சாலையில் பேருந்தை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மற்ற வாகன ஓட்டிகள் சரவணம்பட்டி காவல்துறை நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் காவல்துறை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஆன ஆலாந்துறை சீனிவாச புரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் 30, இடையர் பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் 27, மற்றொரு தரப்பைச் சேர்ந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முருகன் 56, சுரேஷ்குமார் 32, ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.